tamilnadu rains regional meteorological centre in chennai

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மூன்று மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வரை காற்று வீச வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment