Advertisment

'தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு' -வானிலை ஆய்வு மையம் தகவல்!

tamilnadu rains regional meteorological centre in chennai

குறைந்த காற்றழுத்ததாழ்வுப்பகுதி காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

அதன்படி, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisment

கடந்த 24 மணி நேரத்தில் முண்டியம்பாக்கம், வானூரில் தலா 9 செ.மீ., திருத்தணி, குடவாசலில் தலா 5 செ.மீ. மழை பதிவானது.

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்று வீசும் கடற்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Regional Meteorological Centre Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe