'தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு' -சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்!

tamilnadu rains regional meteorological centre in chennai

தெற்கு ஆந்திரா, வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகாரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

அதேபோல் நீலகிரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஐந்து மாவட்டங்களின்ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலா (நீலகிரி)- 6 செ.மீ, அவலாஞ்சி (நீலகிரி)- 5 செ.மீ., வால்பாறை (கோவை)- 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, கேரளா, கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும். பலத்த காற்று வீச வாய்ப்புள்ள கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்”எனசென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Regional Meteorological Centre Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe