tamilnadu rains chennai regional meteorological centre

Advertisment

வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகாரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள்மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக்கடல், அந்தமான், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. மீனவர்கள் வரும் செவ்வாய்க்கிழமை வரை மன்னார்வளைகுடா பகுதிக்கு செல்ல வேண்டாம். திங்கள்கிழமை வரை தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்று (19/09/2020) மாலைக்குள் கரைத் திரும்ப வேண்டும். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment