Advertisment

'தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு' -சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்!

tamilnadu rains chennai meteorological centre

Advertisment

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதன்படி, சேலம், தருமபுரி, நீலகிரி, திருவள்ளூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல், கோவை, திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், மதுரை, புதுச்சேரி (காரைக்கால்) ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisment

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தேவாலா (நீலகிரி)- 13.செ.மீ., பந்தலூர் (நீலகிரி)- 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Regional Meteorological Centre Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe