தென்மேற்குப் பருவ மழை, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குத் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்தியகிழக்கு வங்கக் கடல், ஆந்திர, கர்நாடக, கேரள கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.