Skip to main content

முனிக்கு முன் ஆட்டுக்கறி படையலும், பட்டை சோறும்...மரபு மாறாதாக கிராமங்கள்!

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

ஆடி பிறந்துவிட்டாலே விவசாயிகள் விதைப்பை தொடங்கும் முன்னால் விதை நேர்த்தி செய்து கொள்ள முளைப்பாரி திருவிழா நடத்துவதும், விதைக்க போகும் முன்பு வனங்களிலும், கிராமத்தில் எல்லையிலும் இருக்கும் கிராம காவல் தெய்வங்களுக்கு படையல் போட்ட பிறகே விதைகளுடன் வயல்களை நோக்கி செல்வார்கள். தற்போது விதைப்பு காலம் மாறிவிட்டாலும் முளைப்பாரியும், கிராம தெய்வங்களுக்காக படையலும் மாறவில்லை.

 

தமிழ்நாட்டில் இன்றளவும் சில வனங்கள் இருக்கிறது என்றால் அதை காப்பாற்றி வைத்திருப்பது வனதேவதைகள் தான். அதாவது அடர் வனத்தில் ஒரு மரமோ, மரத்தின் அடியில் உள்ள சிறு கல்லோ தான் கிராம மக்களின் நம்பிக்கை. அது தான் கடவுள். காட்டை அழித்து கோயில் கட்டுவோம் என்று பாங்காளிகள் கூடி முடிவு செய்தாலும் காட்டை அழிக்க விடுவதில்லை என்ற கூறுக்கிறவர்களால் தான் ஊருக்கு ஒன்றிரண்டு காடுகள் உள்ளது.

 

tamilnadu pudukkottai semmanaampottal viilage Avudayar temple non veg food feast


 


ஆடி மாதத்தில் ஊரெங்கும் உள்ள முனிகளுக்கு தான் படையல் நடக்கிறது. நேர்த்திக் கடன் செய்தவர்கள் கொண்டு வரும் ஆடுகளை பூசாரி உத்தரவையடுத்து கிடா வெட்டி வெட்டி தள்ள அங்கேயே சமைத்து ஊருக்கெல்லாம் கறிவிருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படி ஒவ்வொரு கிராமத்திலும் கறிவிருந்து நடந்தாலும் ஒரு சில கிராமங்களில் இன்னும் பழைய மரபுகள் மாறவில்லை. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் பகுதியில் உள்ள முனிக்கோயில்களுக்கு வாரத்தில் பல நாட்கள் பூஜைகள் நடக்கிறது. ஒவ்வொரு பூஜையிலும் 50- க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு படையல் வைத்து ஊரார், உறவுகள் என்று அனைவருக்கும் உணவளிக்கப்படுகிறது. ஆனால் ஆவுடையார்கோயில் பகுதியில் தான் இன்றும் பனை ஓலைகளில் தொண்னை பிடித்து அதில் சோறு போடும் மரபு பழக்கம் இருந்து வருகிறது. எத்தனை பேர் வந்தாலும் அனைவருக்கும் தொண்னை சோறுதான்.

 


சில நாட்களுக்கு முன்பு ஆவுடையார்கோயில் அருகில் உள்ள செம்மனாம்பொட்டல் கிராமத்தில் வயல்வெளியில் உள்ள முனிக்கு கிராமத்தினர் ஆடு வெட்டி படையல் போட்டனர். படையல் முடிந்த பிறகு அதே வயல்வெளியில் ஆளுக்கொரு பனை ஓலை தொண்னையுடன் அமர்ந்து கொள்ள கறிசோறு வழங்கினார்கள் கிராமத்தினர். சுற்றியுள்ள பல கிராம மக்களும் சாதி, மதம் பாகுபாடின்றி விளைச்சல் நிலத்தில் அமர்ந்து சாப்பிட்டனர். 

 

tamilnadu pudukkottai semmanaampottal viilage Avudayar temple non veg food feast

 


இது குறித்து சில இளைஞர்கள் கூறும் போது.. முந்தைய காலத்தில் ஆடிப்பட்டத்தில் விதைக்க போகும் முன்னால முனிக்கு படையல் போட்ட பிறகு தான் விதைக்க போவது வழக்கமாக இருந்திருக்கு. ஆளுக்கொரு ஆட்டுக்கிடா கொண்டு வந்து வெட்டி இங்கேயே சமைத்து ஊரார், உறவுகளுக்கு சோறு போடுறது வழக்கம். அடர்ந்த வனத்தில் இந்த முனி இருந்திருக்கிறது என்பதால பெண்கள் பயப்படுவார்கள் என்பதால பெண்களை அனுமதிக்கிறதில்லை. அதனால் இப்பவும் பெண்கள் வருவதில்லை.

 


கிடா வெட்டு பூஜைக்கு நாள் குறிச்சதுமே பனைமரங்களில் ஏறி பனை மட்டைகளை வெட்டி நிழலில் காயவைத்து ஆயிரக்கணக்கில் பட்டை (தொண்னை) பிடித்து வைத்துவிடுவோம். எத்தனை பேர் வந்தாலும் பட்டை இல்லைன்னு சொல்லக் கூடாது. அந்தக் காலத்தில் வாழை இலை பற்றாக்குறை இருந்த நேரத்தில் பட்டை சோறு கொடுத்திருக்காங்க. ஆனால் இப்ப வாழை இலை வந்தாலும் கூட பழைய மரபை மாற்றக் கூடாதுன்னு தான் இப்ப வரைக்கும் பட்டை பிடித்து அதில் சோறு போடுறோம். அதாவது முனிக்கு ஆட்டுக்கறி படையல் வைத்தால் பட்டையில் சோறு போடனும். அந்த வழக்கத்தில் தான் இப்பவும் செய்றோம். இதே போல சுற்றியுள்ள பல கிராமங்களில் பட்டை சோறு தான் என்றனர்.

 

காலங்களில் மாறினாலும் மரபுகள் மாறக்கூடாது என்பதற்க்கு இதே போல பல கிராமங்கள் அடையாளமாக உள்ளது.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.