Skip to main content

மக்களின் தேவையறிந்து உதவும் விஜய் ரசிகர்!

Published on 10/04/2020 | Edited on 10/04/2020


கரோனா பாதிப்பிலிருந்து மீள தனிமைப்படுத்திக் கொள்வதே சிறந்த மருந்து என்பதை உணர்ந்த சீனா, தனது நாட்டு மக்களைத் தனிமைப்படுத்தி கரோனா வைரஸ் பரவலில் இருந்து மீண்டு வந்துள்ளது.
 

அமெரிக்கா போன்ற பல உலக நாடுகள் உணராததால் வைரஸ் பரவலும், பலியும் நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே போகிறது. இந்த நிலையில் தான் கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது இந்திய அரசு.
 

 

tamilnadu poor peoples helped actor vijay fan


இந்த ஊரடங்கால் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி மக்கள் முடங்கிக் கிடக்கிறார்கள். அன்றாடம் கூலி வேலை செய்து வயிற்றுப் பிழைப்பு நடத்தி வந்த மக்களின் நிலை தான் மோசமாகிக் கொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்கக் கடைகள் திறந்திருந்தாலும் பொருள் வாங்க பணம் இல்லாமல் தவிக்கிறார்கள் கூலித் தொழிலாளர்கள். இதை உணர்ந்த பலரும் தங்களால் இயன்ற உணவுகளை வழங்கி உதவி வருகிறார்கள்.
 

tamilnadu poor peoples helped actor vijay fan

 

இந்தநிலையில, புதுக்கோட்டையில் முன்னாள் விஜய்மன்ற மாவட்டத் தலைவர் ஸ்டாலின் மாஸ்கோ சாலை ஓரங்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு கொடுத்து வந்தவர் பிறகு அந்த மக்களுக்கான அவசரத் தேவை என்ன என்பதை அவர்களிடமே கேட்டறிந்து அந்த உதவிகளைச் செய்து வருகிறார். 108 ஊழியர்களுக்கு மரியாதை, துப்புறவுப் பணியாளர்களுக்கு மரியாதை என தொடர்ந்து செய்து வருகிறார். 
 

tamilnadu poor peoples helped actor vijay fan

 

http://onelink.to/nknapp


ஸ்டாலின் மாஸ்கோ நம்மிடம் கூறியதாவது: "சில நாட்கள் முன்னால் சாலையோரத்தில் குடிசையில் தங்கியிருந்தவர்களை "நீங்கள் எத்தனை பேர் இருக்கீங்க உங்களுக்குச் சாப்பாடு பொட்டலம் குடுக்குறேனு சொல்லி கேட்டேன், அவர்களோ யார் யாரோ வராங்க உணவு பொட்டலத்தை ஒரே நேரத்துல குடுக்குறாங்க. நாங்க சாப்பிட முடியாததை மறு நாள் வச்சு, கெட்டு போனாலும் அதைச் சாப்பிடுறோம், சில நாள் யாருமே வருவதில்லை அன்று முழுவதும் பட்டினியாவே கிடப்போம், எங்களுக்கு உணவு பொட்டலம் எல்லாம் வேண்டாம். காய்கறி, அரிசி, பருப்பு இருந்தா குடுங்க நாங்க பசிக்கிற நேரத்துல பொங்கி சாப்பிட்டுகிறோம்னு சொன்னாங்க". நானும் ஒரு வாரத்துக்குத் தேவையான காய்கறிகள் அரிசி, பருப்பு, கொசுவர்த்திகளை மொத்தமாக கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.

அதே போல, மற்றொரு இடத்தில் அண்ணா "அரிசி, பருப்பு இப்போதைக்கு இருக்கு, குழந்தைகளுக்கும், எங்களுக்கும் குளிச்சுட்டு மாத்திக்க வேற மாத்து துணி இல்லை வாங்குறதுக்கும் வழி இல்லை" என்றார் ஒரு பெண். தளபதியின் வசனப்படி இல்லாதவர்களுக்கு செய்வதை விட இயலாதவர்களுக்கு செய் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் 'தளபதி' சார்பாகவும், 'SAC' சார்பாகவும் 101 பேருக்கு வேட்டி, சேலை, குழந்தைகளுக்குத் தேவையான ஆடை மற்றும்  ஒவ்வொரு குடும்பத்திற்கும் என்னால் முடிந்த சிறு தொகை தலா 200 ரூபாய் பணம் வழங்கப்பட்டது. இன்னும் என்னால் என்ன முடியுமோ அதை எல்லாம் கஷ்டப்படும் மக்களுக்குச் செய்யக் காத்திருக்கிறேன்" என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.