Skip to main content

இரண்டாம் நிலைக்காவலர் உடல்தகுதி தேர்வு நவ. 18ம் தேதி மீண்டும் தொடக்கம்!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

அயோத்தி வழக்கின் தீர்ப்பையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டாம் நிலைக்காவலர் உடல்தகுதி தேர்வு, நவ. 18ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


தமிழக காவல்துறையில், ஆயுதப்படைப் பிரிவுக்கு 2465 இரண்டாம் நிலைக்காவலர்கள், சிறப்புக் காவல் படைப்பிரிவுக்கு 5962 காவலர்கள், சிறைத்துறைக்கு 208, தீயணைப்புத்துறைக்கு 191, இதர பிரிவுகளுக்கு 62 என மொத்தம் 8888 இரண்டாம் நிலைக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்கான போட்டித்தேர்வு கடந்த கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்தது.

TAMILNADU POLICE SELECTION PROCESS AGAIN START TNUSRB


இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல்தகுதி மற்றும் உடல்திறன் தேர்வுகள் நவ. 6ம் தேதி முதல் நடந்து வருகிறது. சேலம் மாநகர், சேலம் மாவட்டம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 2767 பேர் இத்தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் உடல்தகுதி மற்றும் உடல்திறன் தேர்வுகள் நடந்து வருகிறது.


இந்நிலையில், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 9ம் தேதி தீர்ப்பு அளித்தது. இதையொட்டி நாடு முழுவதும் காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவருக்கும் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், அதிமுக்கியத்துவம் இல்லாத பணிகளை ஒத்திவைக்கவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல்தகுதி, உடல்திறன் தேர்வுகளும் கடந்த 10ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


தற்போது நிலைமை சீரடைந்ததை அடுத்து, வரும் 18ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 15 மையங்களிலும் மீண்டும் உடல்தகுதி மற்றும் உடல்திறன் தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட, மாநகர காவல்துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்