தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியதாக இதுவரை 2,08,139 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,79,827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூபாய் 89,23,644 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் விதிகளை மீறியதாக இதுவரை 1,94,995 வழக்குகள் பதிவாகியுள்ளன.

Advertisment

tamilnadu police curfew peoples vehicles and police

இதனிடையே சென்னை, காஞ்சிபுரத்தில் ஊரடங்கை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திருப்பி ஒப்படைக்கப்படுகின்றன. அபராதம் செலுத்திச் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வாகனங்களை உரிமையாளர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment