Published on 20/05/2021 | Edited on 20/05/2021

தமிழகத்திற்கு தினமும் ஆக்சிஜனைக் கூடுதலாக ஒதுக்கக் கோரி தி.மு.க.வின் பொருளாளரும், தி.மு.க.வின் மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு இன்று (20/05/2021) கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து, தமிழகத்திற்கு கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்ய மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், "ஐந்து நாட்களுக்கு தமிழகத்திற்கு தேவையான 900 மெட்ரிக் டன் கூடுதல் ஆக்சிஜனை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மருத்துவ ஆக்சிஜனை அனுப்ப மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.