Advertisment

சைலேந்திரபாபு ஓய்வும் சங்கர் ஜிவால் பதவியேற்பும் (படங்கள்)

Advertisment

தமிழக டிஜிபியாக பதவி வகித்து வந்த சைலேந்திரபாபு நேற்றுடன் பணி ஓய்வு பெற்றதைத்தொடர்ந்து சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று காவல்துறை தலைமையகத்தில் சைலேந்திரபாபு புதிதாகப் பதவியேற்ற சங்கர் ஜிவாலிடம் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

Advertisment

இதையடுத்து காவல்துறை சார்பில் அவரைகாரில் அமரவைத்து புதிய டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் கயிறு கட்டி இழுத்துச் சென்றனர். பின்னர் ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவுக்கு தமிழக காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. காவலர்கள் அணிவகுப்பு நடத்தி சைலேந்திர பாபுவுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் புதிய டிஜிபியாக பதவியேற்றுள்ள சங்கர் ஜிவால் சைலேந்திர பாபுவுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். மேலும் இந்த விழாவில் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா கலந்துகொண்டு சைலேந்திரபாபு அவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கினார்.

DGP sylendra babu tamilnadu police
இதையும் படியுங்கள்
Subscribe