Skip to main content

''இன்னும் ஏழாயிரம் விவசாயிகள் உயிர் தியாகம் செய்தாவது எட்டுவழிச்சாலையை தடுத்து நிறுத்துவோம்!'' - சேலம் நினைவேந்தல் கூட்டத்தில் உறுதிமொழி!!

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

இன்னும் ஏழாயிரம் விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்தாவது எட்டுவழிச்சாலைத் திட்டத்தை தடுத்து நிறுத்தியே தீருவோம் என்று சேலத்தில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் விவசாயிகள் உறுதிமொழி ஏற்றனர். சேலம் முதல் சென்னை வரை பசுமைவழி விரைவுச்சாலை எனப்படும் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளன. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 277.3 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வழியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.



இத்திட்டத்திற்கு ஆரம்பம் முதலே விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. ஏனெனில், எட்டுவழிச்சாலையில் 90 விழுக்காடு ஏழை விவசாயிகளின் விளைநிலங்களின் ஊடாக செல்கிறது. காவல்துறையின் அடக்குமுறையோடு, விவசாயிகளை அச்சுறுத்தி அவர்களின் நிலத்தை கையகப்படுத்தும் வேலைகளை எடப்பாடி பழனிசாமி அரசு செய்தது. இதனால் ஏற்பட்ட விரக்தி, இயலாமை, மன உளைச்சல் காரணமாக கடந்த ஓராண்டில் மட்டும் சேகர், மாரிமுத்து, மாரியப்பன், கங்கையம்மாள், நாச்சியா, ராஜம்மாள், பெத்தம்மாள் ஆகிய ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் சிலர் விஷம் குடித்தும், சிலர் மன உளைச்சல் காரணமாகவும் இறந்துள்ளனர்.

 

 "More than 7,000 farmers sacrificed their lives to stop the eight-lane road!"

 


இந்நிலையில், எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில், உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவேந்தல் கூட்டம் சேலம் மாவட்டம் குள்ளம்பட்டி, பூலாவரி புஞ்சைக்காடு ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28, 2019) நடந்தது. புஞ்சைக்காடு பகுதியில் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் விவசாயி மோகனசுந்தரம் தலைமையில் நூற்றைம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, இறந்தவர்களின் உருவப்படங்களுக்கு மலர்களைத் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.



இதுகுறித்து விவசாயி மோகனசுந்தரம் கூறுகையில், ''சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலைத்திட்டம் வேண்டாம் என்று போராடி, இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுபற்றி தமிழக முதல்வரிடம் கேட்டால், அவர் எங்களிடம் எட்டுவழிச்சாலை வராது என்று கூறுகிறார். ஆனால், வேறு இடங்களில் பேசும்போது, எட்டுவழிச்சாலையை அமைத்தே தீருவோம் என்று பேசுகிறார். இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி 99 சதவீத விவசாயிகள் போராடி வருகின்றனர். ஒரு சதவீத விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆதரவு தெரிவிக்கும் விவசாயிகள் அனைவருமே ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள். 

 

 "More than 7,000 farmers sacrificed their lives to stop the eight-lane road!"

 


சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை வேண்டும் என்று தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். விவசாய நிலங்களை விடுத்து மாற்றுப்பாதைகளில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அல்லது, இப்போதுள்ள சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். இத்திட்டத்தை ரத்து செய்வதற்காக இன்னும் எத்தனை விவசாயிகள் வேண்டுமானாலும் உயிர் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம்,'' என்றார். அதேபோல், குள்ளம்பட்டியில் விவசாயி பன்னீர்செல்வம் தலைமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் அவர்கள், உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளின் பெயர்களை படித்து, அவர்கள் மீது சத்தியம் செய்து, எட்டுவழிச்சாலைத் திட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 


இதுகுறித்து விவசாயி பன்னீர்செல்வம் கூறுகையில், ''எட்டுவழிச்சாலைத் திட்டம் தேவை தேவை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் பேசி வருகிறார். சேலத்தில் இருந்து சென்னைக்கு எதற்கு எட்டுவழிச்சாலை? அப்படி என்ன ஸ்பெஷல் சென்னையில் இருக்கிறது? ஏற்கனவே இருக்கும் சாலைகளை அகலப்படுத்த வேண்டும். சேலம் - உளுந்தூர்பேட்டை சாலையை நான்குவழிச் சாலையாக அகலப்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளனர். அத்திட்டத்தை முதலில் செயல்படுத்தட்டும்.  எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக போராடி, மனம் வெம்பி இதுவரை 7 பேர் இறந்துள்ளனர். இன்னும் ஏழாயிரம் விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்தாவது நாங்கள் இத்திட்டத்தை வர விடாமல் ஓட ஓட விரட்டி அடிப்போம். இது, உயிர்த்தியாகம் செய்துள்ள விவசாயிகள் மீது சபதம் ஏற்று சொல்கிறோம்,'' என்றார். சேலம் மட்டுமின்றி தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளுக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று நடந்தது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.