மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்கக்கோரும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று (23/08/2020) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "பதவியை விட தென் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம் என்பதே என் கருத்து. பதவியா? வளர்ச்சியா? என முதல்வர், துணை முதல்வர் கேட்டால் பதவியைத் துறக்க தயார். இரு மொழி கொள்கையில் அ.தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது. தமிழகத்தில் தடை இல்லாமல் அனைவருக்கும் இ- பாஸ் வழங்கப்படுகிறது" என்றார்.