Skip to main content

ராஜேந்திர பாலாஜி விஷயத்தில் முதல்வர் அமைதி காப்பது ஆச்சரியமளிக்கிறது! - ம.நீ.ம முரளி அப்பாஸ் 

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் தீவிரவாதம் குறித்துப் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிலிருந்து பிரதமர் மோடி வரை இது குறித்த கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். இந்த சர்ச்சை குறித்தும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பேசினோம்.

கமல்ஹாசன் போன்ற அரசியல்வாதிகள் தமிழக மக்களால் ஓரம் கட்டப்படவேண்டியவர்கள் என்பதை தனது வார்த்தை மூலம் நிரூபித்துள்ளார் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே?

’கட்சியை விட்டு படம் எடுக்கப்போ, அரசியலை விட்டு போ’ போன்ற வார்த்தைகளை எங்களிடம்தான் பிரயோகிக்க முடியும்.  அவர்கள் அதிமேதாவிகள். பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கோட்சே மீதுதான் பாசம். கோட்சேவுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தால் அவர்கள் பேர் கெட்டுப்போய் விடும், அதனால் இந்து என்ற வார்த்தைக்கு பின்னால் ஒளிந்து கொண்டு எங்களை எதிர்க்கிறார்கள். மேலும் அந்த பிரச்சாரக்கூட்டத்தில் இந்து, முஸ்லீம் மதம் குறித்து பேசப்படவில்லை. அனைத்து மதத்திலும் தீவிரவாத அமைப்புகள் உள்ளன.

 

kamal

 

தமிழகம், டெல்லி உட்பட பல இடங்களில் கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறதே?

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ’கமலின் நாக்கு வெட்டப்பட வேண்டும்’ என்று கூறியிருந்த நிலையில் தமிழக முதல்வர் அமைதியாக இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இது போன்ற அரசியல் எதிரிகளால் போடப்படும் வழக்குகளை சந்தித்துதான் ஆக வேண்டும். அனைத்து வழக்குகளையும் சந்திக்கத் தயார்.

 

இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சந்தித்ததால் பாஜகவுக்கு எதிராக கமல் பேசுகிறாரா?

காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட பிற கட்சிக்களுக்காக கமல் இவ்வாறு பேசவில்லை. திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததால் காங்கிரஸ் கட்சியுடன் இடைவெளி ஏற்பட்டது. எனினும் திமுக மற்றும் அதிமுக, பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சி உறுதியாக உள்ளது.

 

கமலின் பிரச்சாரம் இப்படி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமல் தொடர்ந்து பிரச்சாரப் பயணம் மேற்கொள்வாரா?

இந்த விவகாரத்தால் எங்கள் தலைவரின் சுற்றுப்பயணத்தில் தடை எதுவும் இல்லை. ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ள நிலையில் திட்டமிட்டபடி இன்று மாலை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியிலும், நாளை அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியிலும் நாளை மறுநாள் சூலூர் சட்டமன்ற தொகுதியில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்வார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார் முதல்வர்'-கமல்ஹாசன் பேச்சு 

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Chief Minister has gone to jail and struggled against dictatorship' - Kamal Haasan speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், 'சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது இப்போதல்ல அவருடைய இளமையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார். எதற்காக அப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துதான். இப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான். கட்சிகள் எல்லாம் அப்புறம் மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு கற்றுக் கொடுத்து விட்டால் அது அதற்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் முதல்வர் முதலில் நீங்கள் சாப்பிடுங்க அப்புறம் படி என இரண்டையும் செய்கிறார். அது ரொம்ப முக்கியம். அவருடைய மகன் உலகத்தரத்தில் நம்முடைய தமிழர்கள் ஸ்போர்ட்ஸில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக உலக தரத்தில் பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பணக்கார வீட்டு பிள்ளைங்க, வசதியாக இருப்பவர்கள் டைம் இருக்கும் பொழுது விளையாட்டு பழகக் கூடியவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லாமல் இந்த வீதியிலிருந்து நாளை ஆசிய சாம்பியன் வரலாம், இந்த வீதியில் இருந்து வரலாம், சாதி, மதம், வசதி பற்றி எதுவும் இல்லை. உங்கள் திறமை தான் அதை முடிவு செய்யும். ஆண் பெண் என்ற பேதம் கூட கிடையாது. நல்ல திறமை இருந்தால் அகில உலகில் பதக்கம் வெல்லும் போட்டியின் வெற்றியாளர்களாக ஆக முடியும்'' என்றார்.