Skip to main content

என்னை மட்டுமல்ல! எல்லா தலைவர்களையும் தான்! -ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக மாணிக்கம் தாகூர் குமுறல்!

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

சாத்தூரில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், ‘காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரை ரப்பர் குண்டுகளால் சுட்டுத் தள்ளுங்கள்..’ என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வசை பாடியதை ‘வில்லங்கப் பேச்சு’ என்னும் தலைப்பில் நக்கீரன் இணையத்தில் இன்று (23/09/2019) வெளியிட்டிருந்தோம்.  இது சம்பந்தமாக, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது சாத்தூர் காவல் நிலையத்தில் விருதுநகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று புகார் தர, சார்பு ஆய்வாளர் சதீஷ்குமார் மனு ரசீது அளிக்க மறுத்துவிட்டார். அதன்பிறகு,  அவர்கள் விருதுநகர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராசராசனிடம் புகார் அளித்து ஒப்புதல் சீட்டு பெற்றுள்ளனர். 

tamilnadu minister rajendra balaji virudhunagar congress mp manik thakur speech



தன் மீதான விமர்சனம் குறித்து விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி. “வாய்க்கு வந்தபடி அமைச்சர் போல என்னால் பேச முடியாது. அமைச்சர் மன்னார்குடி சென்று யார் காலிலே விழுந்தார் என்பது எனக்குத் தெரியும். இதையெல்லாம் சொல்ல வேண்டாமென்று நினைக்கிறேன்.” என்று கூறிவிட்டு, மங்குனி அமைச்சர் என்றும், துடைத்தெறிய வேண்டிய அசிங்கம் என்றும்  தன் சக்திக்கு ஏற்ப ராஜேந்திரபாலாஜிக்கு பதிலடி கொடுத்தார். 
 


“அமெரிக்கா சென்று எதைப் பார்த்தாரோ? எதைச் சாப்பிட்டாரோ? என்ன செய்தாரோ? அதன் விளைவாகத்தான் நிதானம் இழந்து, ராகுல் காந்தியையும், மு.க.ஸ்டாலினையும், அவருடைய குடும்பத்தினரையும், என் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கண்டபடி விமர்சிக்கிறார். அவரை எம்.எல்.ஏ. ஆக்கிய சிவகாசி தொகுதி மக்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கிறார். யாரைக் காப்பாற்றுவதற்காக, எந்தச் சொத்தைக் காப்பாற்றுவதற்காக, திருத்தங்கல்லில் ரயில்வே மேம்பாலம் வருவதற்கு தடையாக இருக்கிறார் என்று தெரியவில்லை. 9 ஆண்டுகள் அமைச்சராக இருந்தும், சிவகாசியை வஞ்சித்துக் கொண்டிருக்கிறார். மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களை கையில் எடுத்துக்கொண்டு, அதை அரசியல் தொழிலாகச் செய்து வருகிறார். விருதுநகர் மாவட்டத்துக்கே அவர் ஒரு களங்கமாக இருக்கிறார். இந்த மாவட்டத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்த ஆர்.பி. உதயகுமார், மாஃபா பாண்டியராஜன் போன்றவர்களை நயவஞ்சகமாக இங்கிருந்து விரட்டினார். அதற்காக யார் யார் காலில் விழுந்தார் என்பது எனக்குத் தெரியும்.

tamilnadu minister rajendra balaji virudhunagar congress mp manik thakur speech


 

பிரதமர் மோடியை டாடி என்கிறார். மோடி இவரைப் பார்த்ததில்லையே! அப்பாவுக்கே தெரியாத பிள்ளையாக இருக்கிறார். தண்ணீர் சேமிப்பு திட்டங்களை ஊக்குவிப்பதற்காக ஜல்சக்தி அபியான் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான அத்திட்டத்தில், இந்த மாவட்டத்தில் பெரிய அளவில் தவறு நடப்பதாக நமக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனை ஆராய வேண்டும். முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்பதை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன். 
 

தமிழ்நாட்டை ஆளும் இந்த அரசாங்கத்தின் அவலநிலை என்னவென்றால், மக்களுக்குப் பணம் கொடுத்தால் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற சிந்தனையிலேயே இருப்பதுதான். இந்த நினைப்பில்தான் தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில்கொள்ளாமல், மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருக்கிறார்கள். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரை ‘செக்-அப்’ பண்ண வேண்டும். அந்த பாதிப்பிலிருந்து அவரைக் காப்பாற்ற வேண்டும். முதலமைச்சர் அதைப் பண்ணவேண்டும். 

tamilnadu minister rajendra balaji virudhunagar congress mp manik thakur speech

சபாநாயாகரின் தலைமையில் நாடாளுமன்றத்தில் இயங்கும் நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு (privilege committee) ரொம்ப பவர் உண்டு.  ராஜேந்திரபாலாஜியின் பேச்சுக்களை பாராளுமன்ற சபாநாயகரிடம் புகாராக எடுத்துச் செல்வேன். இங்கு டிஜிபி அலுவலகத்திலும் புகார் கொடுப்போம். அடுத்து கோர்ட் டைரக்ஷன் வாங்குவோம். என்னுடைய ஒரே கோரிக்கை என்னவென்றால், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நாவடக்கத்தோடு பேச வேண்டும் என்பதுதான்.” என்றார்.  
 

‘அட, போங்கப்பா..’ என்று மக்கள் சலித்துக்கொள்ளும் லெவலில்தான் இருக்கிறது இவர்களின் குடுமிப்பிடி அரசியல்!  


 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.