Skip to main content

கே.டி.ராஜேந்திரபாலாஜியின் வில்லங்கப் பேச்சு!

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

‘இதெல்லாம் எங்கே போயி முடியுமோ தெரியல..?’ என்று அரசியல் நோக்கர்கள் கவலைகொள்ளும் வகையில் சில வில்லங்க விவகாரங்கள் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. 

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், ”அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு அரசியல் நாகரிகத்தையும், நாவடக்கத்தையும் அதிமுக முன்னணித் தலைவர்களும் தமிழக முதல்வரும் கற்றுத்தர முன்வர வேண்டும். இதே அருவருக்கத்தக்க பாணியில் விமர்சித்து வந்தால், அரசியல் ரீதியான விபரீத விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும்.” என்று எச்சரித்திருக்கிறார். 

காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியைக் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். விருதுநகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசபந்து மைதானத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. 
 

tamilnadu minister rajendra balaji speech congress mp press meet


‘மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்’ எனத் தொடங்கி  ‘மோடி எங்க டாடி..’ என்று பேசி பா.ஜ.க.வினரைக் கவர்ந்து, அதே ரீதியில் தொடர்ந்து  ‘ஜிங்ஜாங்’ அடித்தபடியே இருப்பதால், மோடி உருவத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜியைப் பொருத்தி, சமூக வலைத்தளங்களில்  ‘மீம்ஸ்’ போட்டுக்கொண்டே இருக்கின்றனர். 


இதற்கெல்லாம் அசந்துவிடும் ஆளா இந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி?’ என்று காங்கிரஸ் கட்சியினரை மேலும் உசுப்பேற்றிவிட நினைத்தாரோ, என்னவோ? காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்த அதே பாணியில், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரை, சாத்தூரில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், கடுமையான வார்த்தைகளால் சகட்டுமேனிக்கு அர்ச்சித்திருக்கிறார். 

கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதையெல்லாம் அச்சில் அப்படியே தந்துவிட முடியாது. அந்த அளவுக்கு, மக்களவை காங்கிரஸ் கொறடாவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளாரும், விருதுநகர் தொகுதி எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் மீது பேச்சில் அனல் கக்கியிருக்கிறார் அமைச்சர். 

tamilnadu minister rajendra balaji speech congress mp press meet


‘தொகுதிப் பக்கம் வந்தால் எம்.பி.யை விரட்டி அடியுங்கள்..’ என்பதை கரடுமுரடான வார்த்தைகளில் பேசியிருக்கும் ராஜேந்திரபாலாஜி, மாணிக்கம் தாகூரின் டெல்லி அரசியலையும், அங்கிருந்தபடியே அறிக்கை வெளியிடுவதையும் விமர்சிக்கும் சாக்கில், அவருடைய குடும்பத்தினரையும் இழுத்திருக்கிறார். உச்சக்கட்ட ஆத்திரத்தில் “……… இங்கே வந்துச்சுன்னா சுட்ருங்க. ஆளைக் கொன்னுடாதீங்க. …… வந்துச்சுன்னா அடிக்கிற ரப்பர் குண்டு இருக்குல்ல. அதைவச்சு வயித்துல ரெண்டு அடி அடிங்க.” என்று இஷ்டத்துக்குப் பேசியிருக்கிறார். 
 

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் சர்ச்சைக்குரிய இந்தப் பேச்சு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போல், காங்கிரஸ் கட்சியினருக்கு கொந்தளிப்பை அதிகப்படுத்திவிட்ட நிலையில்,   பத்திரிக்கையாளர்களையும் ஊடகத்தினரையும் இன்று காலை 10.30 மணிக்குச் சந்திக்கவிருக்கிறார் மாணிக்கம் தாகூர். 
 

கட்டுரையின் முதல் வரிக்கே மீண்டும் வருவோம்! இது எங்கே போய் முடியுமோ? 




 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.