சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "தமிழக அ.தி.மு.க. அரசு ஆண்மையான அரசு. ஹெச்.ராஜா சொன்ன சொற்கள்; அவருக்குத்தான் பொருந்தும். பா.ஜ.க.வின் ஹெச்.ராஜா அ.தி.மு.க.வை உரசி பார்க்கக்கூடாது. ட்விட்டரில் ஒரு கருத்தை போட்டு விட்டு பின் தனது அட்மின்தான் போட்டது என பல்டி அடித்தவர் ஹெச்.ராஜா. பொதுவெளியில் ஒன்று பேசிவிட்டு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டவர் ஹெச்.ராஜா. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டின் முன் கடந்த காலத்தில் காத்துக்கிடந்தது யார் என அனைவருக்கும் தெரியும். விநாயகர் சதுர்த்தி விழாவில் நீதிமன்ற அறிவுரைகளை பின்பற்றுவோம்". இவ்வாறு அமைச்சர் கூறினார்.