ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "தமிழகத்தில் கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

tamilnadu meteorological chennai announced has rain is possible

சென்னையில் வான மேக மூட்டத்துடன் காணப்படும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6% அதிகம் பெய்துள்ளது. அதே சமயம் சென்னையில் 68 செ.மீ.க்கு பதில் 58 செ.மீ வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. மேலும் புதுவையில் 77 செ.மீ.க்கு பதில் 54 செ.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 30 % குறைவு டிசம்பர் இறுதி வரை வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளது". இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

Chennai Meteorological Department Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe