Skip to main content

தமிழகத்தில் மருத்துவ தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

Published on 16/11/2020 | Edited on 16/11/2020

 

 

tamilnadu medical counseling tamilnadu health minister

 

 

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

 

சென்னை மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

 

நீட் தேர்வில் தகுதி பெற்று ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடக்கிறது.

 

tamilnadu medical counseling tamilnadu health minister

 

வெளியாகியுள்ள மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் அரசு பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. 

 

மருத்துவ தரவரிசை பட்டியலில் 710 மதிப்பெண்களுடன் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஸ்ரீஜன் முதலிடம் பிடித்தார். அதேபோல், 705 மதிப்பெண்களுடன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகனபிரபா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சென்னை அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி ஸ்வேதா 701 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடம் பிடித்தார்.

 

tamilnadu medical counseling tamilnadu health minister

 

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "தமிழகத்தில் நவம்பர் 18- ஆம் தேதி முதல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்க உள்ளது. 313 எம்.பி.பி.எஸ்., 92 பி.டி.எஸ். இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. நேரு உள்விளையாட்டு அரங்கில் தினந்தோறும் 500 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.