தமிழகத்தில் கணினி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Advertisment

தமிழகத்தில் கணினி ஆசிரியருக்கான தேர்வு ஆங்கிலத்தில் நடைபெற்றதை அடுத்து, அந்த தேர்வை செல்லாது என அறிவிக்கக்கோரி மதுரையை சேர்ந்த தயான உட்பட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

tamilnadu mathematics teachers exam result hold in chennai high court

அப்போது தமிழ்வழியில் பயின்றோருக்கு பணியிடத்தில் 20% ஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்த நிலையில், ஆங்கில மொழியில் தேர்வு நடத்தியதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி கணினி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.