2006 மற்றும் 2011ஆம்ஆண்டு திமுக அரசால் வழங்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். இறந்த பணியாளர்கள் குடும்பங்களுக்கு தேர்தல் அறிக்கையில் கூறியபடி நிவாரண நிதியும் அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்கும் அறிவிப்பை முதல்வர் அறிவிக்க வேண்டும் மற்றும் அதிமுக அரசால் 3வது முறையாக பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு 2016 மற்றும் 2021 தேர்தல் அறிக்கையில் கூறியபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 3வது நாளாக சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கம் சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment