Skip to main content

தமிழகத்தில் "லோக் ஆயுக்தா" அமைப்பின் தலைவர் நியமனம்!

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

தமிழகம் உட்பட பல மாநிலங்கள் "லோக் ஆயுக்தா" அமைப்பை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அதற்கான கால அவகாசத்தையும் வழங்கியது. இதனால் தமிழக முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர் தலைமையில் "லோக் ஆயுக்தா" குறித்த ஆய்வு குழு கூட்டம் ஏற்கெனவே நடைப்பெற்றது. இதற்கு பின் இக்குழுவின் நடுவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பெயர்களை முன்மொழிந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதல் வழங்கினார். 

இந்நிலையில் தமிழகத்தில் மக்களவை தேர்தல் தொடர்பான விதிமுறைகள் அமலில் உள்ளதால் லோக் ஆயுக்தா தலைவர் நியமனம் குறித்து தமிழக அரசு தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியது. இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையர் "லோக் ஆயுக்தா" அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்க ஒப்புதல் அளித்ததால் தமிழக அரசிதழில் அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது.

 

lokayuktha



மாநிலத்தில் ஊழலுக்கு எதிரான "லோக் ஆயுக்தா" அமைப்பு தமிழகத்தில்  முதன் முதலாக உருவாக்கப்பட்டது. இது தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. தமிழகத்தில் "லோக் ஆயுக்தா" அமைப்பு உருவாக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் "லோக் ஆயுக்தா" அமைப்பின் முதல் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் கீழ் நீதித்துறை சார்ந்த இருவர் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் திரு. கே. ஜெயபாலன் மற்றும் ஆர். கிருஷ்ண மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் நீதித்துறை சாராத உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஸ்எஸ் அதிகாரி எம்.ராஜாராம் மற்றும் மூத்த வழக்கறிஞர் கே. ஆறுமுகம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் அமைச்சர்கள் ஊழல் தொடர்பான புகார் , அரசு அதிகாரிகள் மீதான புகார்களை இந்த "லோக் ஆயுக்தா" அமைப்பு விசாரணை செய்து உரிய தண்டனையை சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும். மேலும் தற்போது நியமிக்கப்பட்ட லோக் ஆயுக்தா அமைப்பின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். "லோக் ஆயுக்தா" அமைப்பை மக்கள் எவ்வாறு நாடுவது ? என்பது தொடர்பான முழு விவரங்களை தமிழக அரசு தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள் மூலம் விளம்பரங்கள் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.