tamilnadu lockdown relaxation chief minister mkstalin discussion

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூன் 28ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது ஆலோசனை நடத்திவருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசிபோடும் பணிகள், தமிழ்நாட்டில் மேலும் புதிய தளர்வுகளை அளிப்பது உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் கூறுகின்றன.