Skip to main content

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு... மக்கள் குறைதீர் மனு நாள் ரத்து... பெட்டிக்குப் போகும் மனுக்கள்!

Published on 04/12/2019 | Edited on 04/12/2019

தென்காசி புதிய மாவட்டம் செயல்படத் துவங்கிய பிறகு கடந்த வாரம் முதன்முதலாக 25- ஆம் தேதி குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, பாசன வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மனு கொடுத்தனர்.


இதனைத் தொடர்ந்து இரண்டாவது குறை தீர்க்கும் கூட்டம் நேற்று (02.12.2019) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காலை முதலே ஏராளமானோர் மனுக்களுடன் திரண்டு வந்தனர். போலீஸார் அவர்களை ஒழுங்குபடுத்தி மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர். மண்டபத்தில் அமர்ந்திருந்த வருவாய் துறை பணியாளர்களும் மனுக்களை பதிவு செய்து வந்தனர்.

TAMILNADU LOCAL BODY LOCATION PUBLIC GRIEVANCE CAMP CANCEL


இந்நிலையில் திடீரென தமிழகத்தில் ஊராட்சிகளுக்கான உள்ளாட்சி மன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. தேர்தல்  நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததால், குறைதீர் கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத சூழல்  உருவானது. இதனையடுத்து கலெக்டர், அலுவலக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


முதலில் அதிகாரிகளை வைத்து மனுக்களை பெற்றுக் கொள்வது என ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த முடிவை கைவிட்டு மனு கொடுக்க வந்தவர்கள் வரிசையில் நின்று பெட்டியில் மனுக்களை சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதனையடுத்து குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு மனுக்களை புகார் பெட்டியில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்டத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற நிலையில் இரண்டாது கூட்டமே ரத்தானதால் மனு பொடுக்க வந்திருந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

TAMILNADU LOCAL BODY LOCATION PUBLIC GRIEVANCE CAMP CANCEL


இதேபோல் நெல்லை, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளிக்க வந்தவர்கள், ஏமாற்றம் அடைந்தனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பொது மக்களும் யாரிடம் மனு அளிப்பது என்று தெரியாமல் நின்றனர். பின்னர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் வைக்கப்பட்ட பெட்டியில் தங்கள் மனுக்களைப் போட்டுச் சென்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.