Skip to main content

சேலம் மாவட்டத்தில் 4299 பதவிகளில் 403 பேர் போட்டியின்றி தேர்வு! 13923 பேர் தேர்தலை சந்திக்கிறார்கள்!!

Published on 21/12/2019 | Edited on 21/12/2019

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 4299 பதவிகளில் 403 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். எஞ்சியுள்ள பதவிகளுக்கு 13923 பேர் போட்டியிடுகின்றனர்.


தமிழகம் முழுவதும், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30- ஆம் தேதி ஆகிய இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது.

tamilnadu local body election salem district final candidates list


சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக வரும் 27ம் தேதி, 12 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 2294 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக டிசம்பர் 30- ஆம் தேதி 8 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 2005 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 


இந்நிலையில், தேர்தலில் மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தவர்கள், தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் தங்கள் வேட்புமனுக்களை, டிசம்பர் 19- ஆம் தேதி (வியாழக்கிழமை) திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 


சேலம் மாவட்டத்தில் மொத்தம் 29 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இப்பதவிக்கு மொத்தம் 254 பேர் வேட்மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 9 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 245 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 79 வேட்பாளர்கள், தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து 29 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 166 பேர், இரண்டு கட்டங்களாக தேர்தலைச் சந்திக்க உள்ளனர்.  

tamilnadu local body election salem district final candidates list


மாவட்டம் முழுவதும் மொத்தம் 20 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் உள்ள 288 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 2045 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் பரிசீலனையின்போது 63 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 1982 மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. இந்நிலையில், 640 வேட்பாளர்கள் நேற்று தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றனர். 3 பேர், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியாக 1339 பேர் தேர்தல் களத்தைச் சந்திக்க உள்ளனர்.


இம்மாவட்டத்தில் மொத்தம் 385 கிராம ஊராட்சிகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திற்கும் ஒரு தலைவர் என மொத்தம் 385 பதவிகளுக்கு 2502 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் 40 பேருடைய மனுக்கள் சரியில்லை என நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, 2462 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவர்களில் 815 பேர் நேற்று வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டனர். 8 பேர், கிராம ஊராட்சிமன்றத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   


மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள 3597 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 12416 பேரிடம் இருந்து வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 102 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, 12314 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில், 1143 பேர் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டனர். மேலும், 392 பேர் வார்டு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வானார்கள். இதையடுத்து, 13923 பேர் தேர்தலை சந்திக்க உள்ளனர்.  
 

சேலம் மாவட்டத்தில் 3 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 8 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள், 392 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 403 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வரும் 27- ஆம் தேதி நடக்க உள்ள முதல்கட்ட தேர்தலில் 4299 பதவிகளுக்கு 13923 பேர் போட்டியிடுவதாக சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ராமன் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.