Skip to main content

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள்.. கடந்த கால நடவடிக்கைகளும் விருதுகளும்..!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

TAMILNADU IPS OFFICERS TRANSFER TN GOVT ORDER

 

தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி, சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகரக் காவல் ஆணையராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தமிழக சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பியாக ஜெயந்த் முரளிக்கு பதில் தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. : டேவிட்சன் தேவாசீர்வாதம்!

1995ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். பிரிவு அதிகாரியான டேவிட்சன் தேவாசீர்வாதம், தற்போது கோவை மாநகரக் காவல்துறை ஆணையராக உள்ளார். 2015ஆம் ஆண்டு ஐ.ஜி. ரேங்கில் உளவுத்துறைத் தலைவராக சிறிது காலம் பணியாற்றியவர். தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் க்யூ பிரிவில் எஸ்.பி.யாகவும் பணியாற்றியுள்ளார். மதுரை மாநகரக் காவல்துறை ஆணையராகவும், நிர்வாகப் பிரிவு ஐ.ஜி.யாகவும், மேற்கு மண்டல ஐ.ஜி.யாகவும் பணியாற்றியுள்ளார். சிறந்த காவல் பணிக்கான குடியரசுத் தலைவர் விருதைக் கடந்த ஜனவரி மாதம் பெற்றார். உளவுத்துறை ஐ.ஜி.யாக இருக்கும் சி. ஈஸ்வரமூர்த்தி, ஏ.டி.ஜி.பி. பணிகளையும் கவனித்துவந்த நிலையில் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.: தாமரைக்கண்ணன்!

ஐ.பி.எஸ். அதிகாரி தாமரைக்கண்ணன் தற்போது காவல்துறையின் நல்வாழ்வுப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக உள்ளார். 2012ஆம் ஆண்டு சென்னை வங்கிக் கொள்ளை வழக்கில் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டபோது, கூடுதல் காவல் ஆணையராக பதவி வகித்தவர்.  

 

சென்னை மாநகரக் காவல் ஆணையர்: சங்கர் ஜிவால்!

சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு பதிலாக நியமிக்கப்பட்டிருக்கும் சங்கர் ஜிவால், 1990ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். பிரிவு அதிகாரி ஆவார். இவர், சத்தியமங்கலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட சிறப்பு அதிரடி படைப் பிரிவில் ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். திருச்சி மாநகரக் காவல் ஆணையராகப் பதவி வகித்தபோது, பூட்டப்பட்டிருக்கும் வீடுகளை எஸ்.எம்.எஸ். மூலம் கண்காணிப்பதை அறிமுகப்படுத்தினார். உள்நாட்டு பாதுகாப்பு பிரிவில் ஐ.ஜி.யாகப் பணியாற்றியபோது நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தியதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். 2004 - 2006 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தென்மண்டல இயக்குநராக இருந்தபோது, நாட்டிலேயே அதிகளவில் ஹெராயின் பறிமுதல் செய்துள்ளார். சிறந்த காவல் பணிக்காக கடந்த 2019ஆம் ஆண்டு குடியரசுத்தலைவரின் பதக்கம் பெற்றுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
south indian artistes assoociation thanked tn government for new film city

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 19 ஆம் தேதி 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.  

தமிழக அரசு அறிவிப்பிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், “சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழ்த் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென்னையை ஒட்டி பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ். அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர்ஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் குறிப்பாகப் பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாகத் திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட நகரமிது. காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. தமிழ்த் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரியச் செய்கின்ற திட்டமிது. தமிழ்த் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Tamil Nadu Govt order Transfer of 8 IAS officers

சமீப காலமாகப் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அண்மையில் தமிழ்நாடு முழுவதும் 6 மாவட்ட ஆட்சியர் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக ஏ. சுகந்தி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் உள்துறை இணைச் செயலாளராக எஸ்.பி. அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வணிகவரித்துறை இணை ஆணையராக (நிர்வாகம்) பி. ரத்தினசாமி ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று இணை மேலாண் இயக்குநராக ஆனந்த் மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக வி. சரவணன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சி கூடுதல் ஆணையராக (சுகாதாரம்) வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட அதிகாரியாக வீர்பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.