perambalur

பெரம்பலூரில் கிணற்றில் தவறி விழுந்த நபரைக் காப்பாற்றமுயன்றதீயணைப்பு வீரரும்உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே, செல்லிபாளையத்தில் புதிதாகத் தோண்டப்பட்ட கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் ராதாகிருஷ்ணன் என்பவரைமீட்க 3தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கிய நிலையில்,தவறி விழுந்த ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார். அதேவேளையில் மீட்கச் சென்றதீயணைப்பு வீரர்களில்ராஜ்குமார் என்பவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.மீட்கும் பணியில் இறங்கி மயக்கமடைந்த மேலும் 2 தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment