Published on 18/07/2021 | Edited on 18/07/2021

தமிழகத்தில் மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மீன்வளத்துறை ஆணையராக கே.எஸ்.பழனிசாமி, பொருளியல், புள்ளியியல்துறை ஆணையராக கருணாகரன், தொழிலாளர்துறை முதன்மைச் செயலாளர்/ ஆணையராக அதுல் ஆனந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறைத் கூடுதல் இயக்குநர் சரவணனுக்கு, தமிழ் வளர்ச்சி இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.