Skip to main content

''கலைஞர் இருந்தபோது இருந்த தி.மு.க வேறு, தற்போது இருக்கும் தி.மு.க வேறு,''- குஷ்பு பரபரப்பு பேச்சு!

Published on 10/01/2021 | Edited on 10/01/2021

 

 'I came out of the party because there is no security in DMK' '- Khushbu's sensational speech in Trichy!

 

திருச்சி மாவட்டம் கோபி பகுதியில் உள்ள சமுதாயத் திடலில் இன்று (10/01/2021) ''நம்ம ஊர் பொங்கல்'' என்ற தலைப்பின் கீழ் பாரதிய ஜனதா கட்சியினர் பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். மதியம் ஒரு மணி அளவில் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு சுந்தர் பொங்கல் விழாவில் வந்து கலந்து கொள்வார் என்று அறிவித்திருந்த நிலையில், இதற்காக 150- க்கும் மேற்பட்ட பொங்கல் பானைகளை காலை 10.00 மணிக்கு திடலில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. அவர் வர தாமதமானதால் பொங்கல் பானைகளில் மதியம் 01.00 மணியளவில் பொங்கல் பொங்கி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மாலை 05.00 மணியளவில் விழாவிற்கு வந்த குஷ்பு, மேடையில் ஏறி அங்கு பா.ஜ.க. சார்பில் நடத்தப்பட்ட சிறு கலை நிகழ்ச்சிகளைப் பார்த்தார். 'பா.ஜ.க.விற்கு கண்டிப்பாக வாக்களியுங்கள்' என்று வாக்கு சேகரித்து விட்டு அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவரிடம், 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார் என்ற கேள்விக்கு, கடந்த தேர்தலிலும் அவர் இதை தான் பேசினார். தற்போது கலைஞர் இல்லாத ஒரு தேர்தலை சந்திக்கப் போகிறோம் இருந்தாலும் இன்று நடைபெறக்கூடிய எடப்பாடி தலைமையிலான ஆட்சி பெரிய அளவில் குற்றம் குறைகளைக் கண்டுபிடிக்க முடியாது. மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

 

 'I came out of the party because there is no security in DMK' '- Khushbu's sensational speech in Trichy!

 

ஸ்டாலின் கலைஞர் இவர்கள் இருவரையும் ஒருபோதும் ஒப்பிட்டுப் பேச முடியாது. கலைஞருடைய இடத்தை நிரப்ப முடியாது. ஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க. இந்தத் தேர்தலை சந்திக்கிறது. எடப்பாடிக்கு இது ஒரு புதிய சவாலான தேர்தலாகவே அமையும். தேசியக் கட்சிகளில் இருந்து மாநில கட்சிகள் வரை மிகப்பெரிய கட்சிகளாக இருக்கக்கூடிய பா.ஜ.க.வும், காங்கிரசும், அ.தி.மு.க.வும், தி.மு.க.வும், எந்தக் கட்சிகளும் சமூக வலைதளங்களால் உருவாக்கப்பட்டவை அல்ல.

 

பெண்களை இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறியிருக்கும் கருத்திற்கு உங்களுடைய பதில் என்று கேட்டதற்கு, தாத்தாவுக்கு இப்படிப்பட்ட ஒரு பேரனா என்று பார்க்கும் போது மனம் வேதனையாக இருக்கிறது. நான் ஏன் அந்த கட்சியில் இருந்து வெளியே வந்தேன் என்று இந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இது புரிந்திருக்கும். கலைஞர் இருந்தபோது இருந்த தி.மு.க. என்பது வேறு தற்போது இருக்கும் தி.மு.க. என்பது வேறு, என்றார்.

 

செய்தியாளர்களைச் சந்தித்த பிறகு திடலில் இருந்து புறப்பட்டு நுழைவாயில் அருகே வரும்போது திருச்சி மாவட்ட பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வி என்பவர் கூட்ட நெரிசலில் கீழே விழுந்து மண்டை உடைந்ததால் அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். 150- க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் பானைகளோடு தங்களை ஒருமுறையாவது வந்து பார்ப்பார் என்று ஆவலோடு காத்திருந்த நிலையில், அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. காத்திருந்த பெண்களின் கூட்டத்தை எட்டிக்கூட பார்க்காமல் மேடைக்கு அருகிலேயே காரில் ஏறி வெளியேறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.