TAMILNADU HEAVY RAINS AND FLOODS IAS OFFICERS APPOINTED IN TN GOVT

Advertisment

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் வெள்ளம் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ். அந்தஸ்த்தில் உள்ள சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திருச்சி மாவட்டம்- ஜெ.ஜெயகாந்தன், ஈரோடு மாவட்டம்- எஸ்.பிரபாகர், வேலூர் மாவட்டம்- கே.நந்தகுமார், ராணிப்பேட்டை மாவட்டம்- ஆர்.செல்வராஜ், நாகப்பட்டினம் மாவட்டம்- கே.பாஸ்கரன், கடலூர் மாவட்டம்- வி.அருண்ராய், மதுரை மாவட்டம்- டி.என்.வெங்கடேஷ், திருவள்ளூர் மாவட்டம்- ஆர்.ஆனந்தகுமார், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள்- அனில் மேஷ்ரம், விருதுநகர் மாவட்டம்- சி.காமராஜ் ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒருங்கிணைப்பு பணிகளைக் கவனிப்பார்கள் என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.