இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் வேகம் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகளவில் இருக்கிறது. வைரஸ் பரவலில் இருந்து காத்துக்கொள்ளும் வகையில் தனிமைப்படுத்தல், சமூக விலகல் உள்ளிட்ட விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
மேலும், மாவட்டம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட விவரங்கள் வீடு வீடாகச் சென்று சேகரிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் இதுவரை 1500- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்களுக்கு சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் அதைப்பற்றி உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும்,'' என்றனர்.