Skip to main content

சளி, காய்ச்சல் இருந்தால் உடனே சொல்லுங்க! சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

Published on 12/04/2020 | Edited on 12/04/2020

வீடுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளவர்கள் சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் பாதிப்பு இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் வேகம் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகளவில் இருக்கிறது. வைரஸ் பரவலில் இருந்து காத்துக்கொள்ளும் வகையில் தனிமைப்படுத்தல், சமூக விலகல் உள்ளிட்ட விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

tamilnadu health ministry request to peoples

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இதுவரை 14 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள், டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள், இந்தோனேஷிய மத போதகர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 25000க்கும் மேற்பட்டோர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். 

மேலும், மாவட்டம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட விவரங்கள் வீடு வீடாகச் சென்று சேகரிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் இதுவரை 1500- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்களுக்கு சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் அதைப்பற்றி உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும்,'' என்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

 

 

Next Story

சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

Sonia Gandhi is infected with Corona for the second time!

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

 

இது தொடர்பாக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசின் நெறிமுறைகளின் படி, சோனியா காந்தி தனிமைப்படுத்துதலில் உள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

கடந்த மூன்று மாதங்களில் அவர் இரண்டாவது முறையாக, கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து கவலைத் தெரிவித்திருக்கும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

 

அவரது உடல் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்வுக்கும் பிரார்த்திப்பதாக கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

ஏற்கனவே, பிரியங்கா காந்திக்கு மீண்டும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட நிலையில், சோனியா காந்திக்கும் மீண்டும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.