Skip to main content

தமிழகத்தில் இருந்து கொண்டு எச்.ராஜா தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறார்: ஜெயக்குமார்

Published on 30/03/2018 | Edited on 30/03/2018


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளோம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விடப்போவதில்லை. தமிழக நலனுக்காக அனைவரும் ஒருமித்த கருத்துடன் குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து கொண்டு எச்.ராஜா தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்