ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
அப்போது பேசிய அவர், "அரசுப் பள்ளிகளில் ஜூலை 13- ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் எனவும்பாடத் திட்டங்களை வழங்கியவுடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும் எனவும் அறிவித்தார். மேலும்,12- ஆம் வகுப்பில் இறுதித்தேர்வு எழுதாத 34,482 மாணவர்களில் 718 மாணவர்கள் தேர்வு எழுத ஒப்புதல் அளித்துள்ளதால், அந்த 718 மாணவர்களுக்குஇன்று மாலைக்குள் தேர்வு தேதியை முதல்வர் அறிவிப்பார் எனத் தெரிவித்தவர்,இறுதித் தேர்வு முடிந்தவுடன் நான்கு நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும்" என்றார்.