tamilnadu govt ias officers transfer

ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்புகளை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவில், “நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக கார்த்திகேயன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளராக மங்கத்ராம் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையராக ஆனந்த் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீத்தா ஹரீஷ் தக்கார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கார்த்திக் உயர் கல்வித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை மேலாண் இயக்குநராக விஷுமகாஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நுகர்பொருள் வாணிப கழகத்தின் தலைவராக அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குநராக பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். அர்ச்சனா பட்நாயக் மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண் இயக்குநராக உள்ள இளம்பகவத் மகளிர் உரிமைத் தொகை திட்ட சிறப்பு அதிகாரியாகக் கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க பதிவாளராக உள்ள சுப்பையனுக்கு கூடுதல் பொறுப்பாக கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்ய சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.