Skip to main content

லேப்டாப் கேட்ட முன்னாள் மாணவரை தாக்கிய ஆசிரியர்!

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

தமிழக அரசு சார்பில் 11, 12- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் லேப்டாப்களை மாணவர்கள் படிக்கின்ற காலத்திலேயே அரசு பள்ளிகளுக்கு வழங்காததால் படிக்கின்ற மாணவர்களுக்கு உரிய நேரத்தில் லேப்டாப் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

 
கடலூர் மாவட்டத்திலும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிக்கும் வரையிலும் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கவில்லை. அதனால் பள்ளியை விட்டு சென்ற பிறகும் மாணவர்கள் லேப்டாப் கேட்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

TAMILNADU GOVT FREE LAPTOP STUDENT TEACHER INCIDENT POLICE


இந்நிலையில் கடலூர்  மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர் தினேஷ்(19) மற்றும் அவருடன் படித்த நண்பர்களுக்கு 2017- 18 ஆம் ஆண்டுக்கான லேப்டாப் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. அதனால் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் பள்ளிக்கு சென்று அங்கு பள்ளி வளாகத்தில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகனிடம் லேப்டாப் குறித்து கேட்டுள்ளனர். அதில் ஆத்திரமடைந்த ஆசிரியர் சந்திரமோகன் மாணவர் தினேஷை சரமாரியாக தாக்கினார். அதில் மாணவர் தினேஷ் காயமடைந்ததுடன், அவரின் செவித்திறனும், பாதிக்கப்பட்டதாக கூறி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் மாணவரை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பாகியுள்ளது. 

TAMILNADU GOVT FREE LAPTOP STUDENT TEACHER INCIDENT POLICE

மேலும் இது தொடர்பாக  தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் சந்திரமோகனை கைது செய்தனர். அதே சமயம் ஆசிரியர் சந்திரகுமார் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வித்துறையும் விசாரணை மேற்கொண்டுள்ளது. இதனிடையே கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்ககோரி மற்ற ஆசிரியர்கள் பள்ளியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.