தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றலாம் என்றும், விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களை பதிவேற்றம் செய்வது கட்டாயம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது. இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 30- ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
உதவிப்பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணைய தள முகவரி: https://trbapr.onlineregistrationform.org/TRBAPR/index.jsp ஆகும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இணைய தள முகவரி: http://trb.tn.nic.in/ அணுகலாம்.