ரூபாய் 314 கோடி எப்படி திரட்ட முடியும்? - அண்ணா பல்கலைக் கழகத்துக்கு தமிழக அரசு கேள்வி!

tamilnadu government wrote to letter for anna university

ஆண்டுக்கு ரூபாய் 314 கோடியை எப்படித்திரட்ட முடியும் என அண்ணா பல்கலைக்கழகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது.

ஓராண்டில் ரூபாய் 314 கோடியை அண்ணா பல்கலைக்கழகத்தால் உருவாக்க முடியும் என்று கடந்த ஜூன் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா கூறினார். அதேபோல் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கடந்த வாரம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது தொடர்பாகவும் செய்தி வெளியானது.

இந்த நிலையில், ரூபாய் 314 கோடி திரட்டுவது குறித்த சாத்தியத்தன்மையை தெரிவிக்குமாறு தமிழக அரசு, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

Anna University Tamilnadu govt
இதையும் படியுங்கள்
Subscribe