Skip to main content

ஒரே நாளில் உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் டாஸ்மாக் வழக்கு!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

tamilnadu government tasmac shops high court and supreme court


"டாஸ்மாக் வழக்கு இன்று (15/05/2020) உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் விசாரணைக்கு வருகிறது. வழக்கை எதிர்கொள்ள நானும் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜாவும் தயார் நிலையில் உள்ளோம்.." என்கிறார், வழக்கறிஞர் K.பாலு. மேலும் அவர், “சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்டசிறப்பு அமர்வு முன்பாக காலை 10.30 மணிக்கு வழக்கு விசாரணை தொடங்கும்.  


மனுதாரர்கள் தரப்பு வாதத்தை நேற்றே நாங்கள் நிறைவு செய்ததால், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயண் தனது வாதத்தை இன்று முன்வைப்பார். உச்சநீதிமன்றத்தில் நமது வழக்கு இன்று 36- ஆவது வழக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வழக்கு சுமார் 12.00 மணி அளவில்  விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

tamilnadu government tasmac shops high court and supreme court


சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு வழக்கின் இறுதி விசாரணையை நடத்திக் கொண்டிருப்பதால், உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று முறையிட உள்ளோம். இரண்டு வழக்குகளும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடைபெற உள்ளதால், சென்னையிலிருந்தே இரண்டு வழக்குகளையும் நடத்த முடியும். உயர்நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞரின் வாதத்தைக் கவனித்துக் கொண்டே, உச்சநீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வருகின்ற பொழுது, அந்த வழக்கிலும் ஆஜராவதில் எங்களுக்கு எந்தச் சிரமமும் இருக்கப் போவதில்லை. ஒருவேளை உச்சநீதிமன்றமும் வழக்கு விசாரணையை இன்றே நடத்தினால், சற்று சிரமமாகத்தான் இருக்கும்.” என்கிறார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.