Skip to main content

'தமிழகத்தில் 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்'- தமிழக அரசு உத்தரவு!

Published on 01/07/2020 | Edited on 01/07/2020

 

tamilnadu government order 39 ips officers transfer

 

தமிழகத்தில் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

அதன்படி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் தமிழக செயலாக்கப் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன், கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். மே 15- ஆம் தேதி 2017- ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டார். 

 

சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக ஆபரேஷன் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றியுள்ளார். மேலும் கரோனா தடுப்பு சிறப்புக்குழுவில் சென்னை வடக்கு மண்டல ஐ.பி.எஸ் அதிகாரியாகவும் உள்ளார். 

 

தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருச்சி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். வரதராஜு ஓய்வு பெற்றதால் திருச்சி மாநகர புதிய காவல் ஆணையராக லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். 

 

தென்சென்னை சட்டம்- ஒழுங்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் மதுரை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம் தொழில்நுட்பப் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

திருப்பூர் காவல் ஆணையர் சஞ்சய் குமார் சென்னை போலீஸ் தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். திருச்சி காவல் ஆணையர், மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜ் சென்னை நகர தலைமைக் கூடுதல் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

சென்னை தலைமையக கூடுதல் ஆணையர் ஜெயராமன் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி. ரவி ஈரோடு சிறப்பு அதிரடிப்படை ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

போலீஸ் பொதுப்பிரிவு ஐ.ஜி கணேசமூர்த்தி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

வடசென்னை சட்டம்- ஒழுங்கு கூடுதல் ஆணையர் தினகரன் தென்சென்னை சட்டம்- ஒழுங்கு கூடுதல் ஆணையரானார். சென்னை நகர போக்குவரத்துக் கூடுதல் ஆணையர் அருண் வடசென்னை சட்டம்- ஒழுங்கு கூடுதல் ஆணையரானார்.

 

வடசென்னை சட்டம்- ஒழுங்கு இணை ஆணையர் கபில்குமார் சரத்கர் பதவி உயர்வு பெற்று சி.பி.சி.ஐ.டி ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி சரக டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் சென்னை வடக்கு மண்டல சட்டம்- ஒழுங்கு இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி கண்ணன் பதவி உயர்வு பெற்று சென்னை போக்குவரத்துக் கூடுதல் ஆணையரானார். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ்குமார் பதவி உயர்வு பெற்று போலீஸ் நிர்வாக ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

சென்னை தெற்கு போக்குவரத்து இணை ஆணையர் எழிலரசன் விழுப்புரம் சரக டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி தேன்மொழி பதவி உயர்வு பெற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி ஜோஷி நிர்மல்குமார் பதவி உயர்வு பெற்று போலீஸ் விரிவுபடுத்துதல் பிரிவு ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா திருச்சி சரக டி.ஐ.ஜி யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

 

ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா தஞ்சை சரக டி.ஐ.ஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கடலோர காவல்படை டி.ஐ.ஜி பவானீஸ்வரி பதிவு உயர்வு பெற்று சென்னை பொதுப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி கடலோரக் காவல்படை டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன் ஐ.ஜி.யாக பதிவு உயர்வு பெற்று திருப்பூர் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

சென்னை நிர்வாக பிரிவு டி.ஐ.ஜி நரேந்திரன் நாயரை கோவை சரக டி.ஐ.ஜி.யாக தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை தலைமையிட இணை ஆணையர் பாபு தென்சென்னை சட்டம்- ஒழுங்கு இணை ஆணையரானார்.

 

சென்னை ஆயுதப்படை டி.ஐ.ஜி. செந்தில்குமாரி சென்னை தலைமயிட டி.ஐ.ஜி.-யாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய டி.ஜி.பி மாநில மனித உரிமை ஆணைய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு பணியில் உள்ள எஸ்.பி.அபிஷேக் தீக்ஷித் அதே பணியிலேயே டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். 

 

http://onelink.to/nknapp

 

சென்னை சி.பி.சி.ஐ.டி எஸ்.பி மல்லிகா அதே பிரிவில் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சாமுண்டீஸ்வரி பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். 

 

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரிய எஸ்.பி.பாண்டியன் பதவி உயர்வு பெற்று ரயில்வே டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.ராஜேஸ்வரி பதவி உயர்வு பெற்று சென்னை ஆயுதப்படை டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். 

 

சென்னை பூக்கடை துணை ஆணையர் ராஜேந்திரன் பதவி உயர்வு பெற்று மதுரை சரக டி.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். 

 

தென்சென்னை டிராபிக் துணை ஆணையர் மயில்வாகனன் பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பாதுகாப்பு துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
south indian artistes assoociation thanked tn government for new film city

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 19 ஆம் தேதி 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.  

தமிழக அரசு அறிவிப்பிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், “சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழ்த் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென்னையை ஒட்டி பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ். அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர்ஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் குறிப்பாகப் பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாகத் திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட நகரமிது. காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. தமிழ்த் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரியச் செய்கின்ற திட்டமிது. தமிழ்த் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Tamil Nadu Govt order Transfer of 8 IAS officers

சமீப காலமாகப் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அண்மையில் தமிழ்நாடு முழுவதும் 6 மாவட்ட ஆட்சியர் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக ஏ. சுகந்தி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் உள்துறை இணைச் செயலாளராக எஸ்.பி. அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வணிகவரித்துறை இணை ஆணையராக (நிர்வாகம்) பி. ரத்தினசாமி ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று இணை மேலாண் இயக்குநராக ஆனந்த் மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக வி. சரவணன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சி கூடுதல் ஆணையராக (சுகாதாரம்) வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட அதிகாரியாக வீர்பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.