Skip to main content

7.5% இட ஒதுக்கீடு தாமதம் - கண்கலங்கிய நீதிபதி!

Published on 16/10/2020 | Edited on 16/10/2020

 

TAMILNADU GOVERNMENT MADURAI HIGH COURT JUDGES

 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய பின் நீட் தேர்வு முடிவை வெளியிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று (16/10/2020) விசாரணைக்கு வந்தது.

 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு காரணமாக மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுப் பட்டியலைத் தாமதப்படுத்த முடியுமா?' எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், 'சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது, நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது' என்றார்.

 

நீட் தேர்வு முடிவுகளுக்குப் பின்னர், எப்போது கலந்தாய்வு என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் விரைவாக முடிவெடுக்க வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டை ஆதரித்துள்ளனர். உணவில்லாத, சமூக ரீதியாகப் பின் தங்கிய ஏழைகளே பெரும்பாலும் அரசுப் பள்ளியில் பயில்கின்றனர். முடிவெடுக்க ஒருமாத காலம் போதாதா? முடிவுகள் வெளியாகி, மாணவர் சேர்க்கை முடிந்த பின் முடிவெடுத்து என்ன பயன்? உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களில் இடம்பெறுவது அதிகரிக்கும் என்று கூறிய நீதிபதிகள், தமிழக அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்குமாறு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, வழக்கைப் பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.

 

Ad

 

இதனிடையே கிராமப்புற மாணவர்களின் வருத்தம், வேதனையை அளவிட முடியாது என நீதிபதி கிருபாகரன் கண் கலங்கினார்.

 

இந்த நிலையில் இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் முடிவு தெரியும் வரை மருத்துவக் கலந்தாய்வு இல்லை எனத் தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உறுதியளித்துள்ளது. இதையடுத்து, அக்டோபர் 29- ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.