Skip to main content

சென்னையில் குவியும் செவிலியர்கள்.....

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

கருவில் தொடங்கி கல்லறை வரை மருத்துவப் பணி என்றால் அது கிராம சுகாதாரச் செவிலியர்களின் தன்னலமற்ற சேவைதான். அப்படி மக்களுக்காக முழுமையாக தங்களை ஈடுபடுத்தி செவிலியர் பணியில் ஈடுபட்டு வரும் கிராம சுகாதார செவிலியர்களை அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு ஏராளமான வேலைகளை திணிப்பதும், பணி மாறுதல், சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 

கடந்த சில மாதங்களாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் இயங்கும் கிராம சுகாதார செவிலியர்கள் கடும் மன உளைச்சளில் உள்ளார்கள். தமிழக சுகாதாரத் துறையின் செயலாளர் பீலாராஜேஷ், செவிலியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் பணிப்பளுவை அதிகரிக்கும் வகையில் ஆய்வுக் கூட்டம், வீடியோ கான்பரன்ஸ் உள்ளிட்டவையை தொடர்ந்து நடத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டை மருத்துவர்கள், செவிலியர்கள் முன்வைத்துள்ளனர்.

tamilnadu government hospital nurse arrive at chennai health department


இதைக் கண்டித்து மருத்துவத் துறை பணியாளர்கள் மாநிலம் முழுவதும் பல கட்ட போராட்டங்களையும் நடத்தி உள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக நாளை (14.02.2020) வெள்ளிக்கிழமை ஒட்டுமொத்த கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பகுதி, சமுதாய செவிலியர்கள் (VHN, SHN, CHN) என அனைவரையும் உள்ளடக்கிய கூட்டு போராட்ட குழுவின் சார்பாக சென்னையில் உள்ள மாநில தலைமை சுகாதாரப் பணிகள் இயக்குனர் (DMS) அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள் சென்னையில் குவிந்து வருகிறார்கள்.
 

சுகாதாரத்துறை செவிலியர்களின் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் 13- ஆம் தேதி மாலை துறையின் உயரதிகாரிகள் செவிலியர் சங்க நிர்வாகிகளை அழைத்து போராட்டத்தை கைவிடுங்கள், மீறி போராட்டம் நடத்தினால், அதில் கலந்துக் கொள்ளும் அனைவரையும் சஸ்பெண்ட் செய்வோம் என அதிகாரிகள் கூறியதாகவும், ஆனால் திட்டமிட்டப்படி எங்கள் போராட்டம் நடக்கும் என அதிகாரிகளிடம் உறுதியாக தெரிவித்ததாக செவிலியர் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். 
 

மக்களுக்கு நல்வாழ்வு கொடுக்க சிகிச்சை கொடுக்கும் சுகாதாரத்துறைக்கு செவிலியர்கள் போராட்டம் என்ற சிகிச்சையை கொடுக்கிறார்கள். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.