Advertisment

சிறுமி வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு!

tamilnadu government appeal at madurai high court dindigul child incident

Advertisment

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், குரும்பட்டி கிராமத்தில் முடிதிருத்தும் தொழிலாளியின் 13 வயது மகள் கடந்தாண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலைச் செய்யப்பட்டார். சிறுமி கொலை வழக்கில் கைதான கிருபானந்தனை கடந்த மாதம் விடுவித்தது திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றம்.

tamilnadu government appeal at madurai high court dindigul child incident

Advertisment

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முடி திருத்தும் மகளான சிறுமிக்கு நீதிக்கேட்டும், தமிழகம் முழுவதும் முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கில் தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வு, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

madurai high court CHILD INCIDENT Dindigul district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe