2019- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் சிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு 2019- ஆம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் விருதுடன் ரூபாய் 5 லட்சம், நினைவுப்பரிசு, பாராட்டுச்சான்றிதலும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
மேலும் கபிலர் விருது- புலவர் வெற்றியழகன், உ.வே.சா.விருது- வே.மகாதேவன், கம்பர் விருது- சரசுவதி ராமநாதன், சொல்லின் செல்வர் விருது- கவிதாசன், ஜி.யு.போப் விருது- மரியஜோசப் சேவியர், இளங்கோவடிகள் விருது- கவிக்கோ ஞானச்செல்வன் (எ) திருஞானசம்பந்தம், உமறுப்புலவர் விருது- லியாகத் அலிகான், அம்மா இலக்கிய விருது- உமையாள் முத்து, சிங்காரவேலர் விருது- அசோகா சுப்பிரமணியன், மறைமலையடிகளார் விருது- புலவர் முத்துக்குமாரசாமி, அயோத்திதாசப் பண்டிதர் விருது- புலவர் பிரபாகரன், சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதுகள்- முகமது யூசுப், மஸ்தான் அலி, பேராசிரியர்.சிவ. முருகேசன், 2018- ஆம் ஆண்டுக்கான முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது முனைவர் நாகராசனுக்கு வழங்கப்பட உள்ளது.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விருதுகளுடன் ரூபாய் 1 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.