tamilnadu government announced ips officers

Advertisment

தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை டி.ஜி.பி.யாக ஜாபர்சேட்டை நியமித்து தமிழக உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை டி.ஜி.பி.யாக ஜாபர் சேட் நியமிக்கப்பட்டுள்ளார்.ரயில்வே டி.ஜி.பி.யான சைலேந்திர பாபு ரேஷன் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. பணியையும் கவனிப்பார். காத்திருப்பு பட்டியலில் இருந்த துரைகுமார் ஐ.பி.எஸ்., காவல்துறை நிர்வாகப் பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சைலேந்திர பாபுவிடம் கூடுதல் பொறுப்பாக இருந்த தீயணைப்புத்துறை ஜாபர் சேட்டிடம் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.