tamilnadu five districts heavy rains regional meteorological centre

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, இராமநாதபுரம், நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதியில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisment

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விரகனூர் அணை (மதுரை)- 10 செ.மீ., திருமங்கலம் (மதுரை), மதுரை விமான நிலையம் தலா 8 செ.மீ., வாலிநோக்கம் (ராமநாதபுரம்), வத்திராயிருப்பு (விருதுநகர்) தலா 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது”இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.