சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பல்வேறு விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த,பி.ஆர்.பாண்டியன், ரெங்கநாதன் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது, 'கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் 'எனஅறிவித்த முதல்வருக்குநன்றிதெரிவித்தனர்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு காவிரி பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரெங்கநாதன், "விவசாயக் கடன்களை ரத்துசெய்த முதலமைச்சருக்கு நன்றி. விவசாயக் கடன் தள்ளுபடி,தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு நடந்தது கிடையாது.இது மிகப்பெரிய விஷயம்" என்றார்.