தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது.
தமிழகத்தில் மொத்தமாக விண்ணப்பித்த 1.10 லட்சம் மாணவர்கள் நான்கு குழுவாக பிரிக்கப்பட்டு தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் முதல் குழுவைச் சேர்ந்த 12,263 மாணவர்களுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு தொடங்கியுள்ளது. கட்டணம் செலுத்த 4 நாள், விருப்ப கல்லூரியை இறுதிப்படுத்த 2 நாள் அவகாசம் தந்து அக்டோபர் 28 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.