Skip to main content

தரம் இல்லாத தமிழக பொறியியல் கல்லூரிகள்... கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலைக்கழகம்!

Published on 10/05/2019 | Edited on 10/05/2019


தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் ஆண்டுந்தோறும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பை முடித்து வெளி வருகின்றனர். ஆனால் பொறியியல் படிப்பை முடித்த மாணவர்களில் சுமார் 50% குறைவான மாணவர்களே வேலை வாய்ப்பை பெறுகின்றனர். மீதமுள்ள மாணவர்கள் தனியார் நிறுவனத்தில் வேலையைத் தேடியும் , அரசு வேலை வாய்ப்பை தேடியும், படிப்பிற்கு சமந்தம் இல்லாத வேலையில் இளைஞர்கள் பயணம் செய்து வருகின்றனர். இதற்கு அனைவரும்  பொதுவாக கூறும் காரணம் என்னவென்றால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் உட்கட்டமைப்பு இல்லாததாலும் , கல்லூரிகள் வேலை வாய்ப்புகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தராததாலும் , இதில் இரண்டுமே இல்லாத கல்லூரிகளுக்கு தமிழக அரசு , அண்ணா பல்கலைக்கழகம் , பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரம் வழங்கியதே முக்கியமாக பார்க்கப்படுகிறது.

 

ANNA UNIVERSITY


அதே போல் தமிழக அரசின் தொழிற்துறை அமைச்சகம் வேலைவாய்ப்புகளை உருவாக்காததும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சிண்டிகேட் கமிட்டி குழு தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை சுமார் 30% உயர்த்தவும் , அதாவது பொறியியல் படிப்பிற்கான ஆண்டு கட்டணம் ரூபாய் 20,000 வரை உயர்த்த இந்த குழு முடிவு செய்து அது தொடர்பான செய்திகளும் வெளியாகியுள்ளன.  

 

UNEMPLOYEED

 

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரம் மற்றும் கல்வியின் தரம் , வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை அண்ணா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தத் தயாரா? மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் பட்சத்தில் மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறாதது ஏன்? பொறியியல் கல்லூரிகளின் தர வரிசை பட்டியல் ஒரு பொய் பட்டியலா? என்ற கேள்வியும் எழுகிறது.  கடந்த மார்ச் மாதத்தில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளின் நடப்பு ஆண்டு முதல் கல்வி கட்டணத்தை உயர்த்தி அம்மாநில உயர்கல்வித்துறை அறிவிப்பாணையை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து கர்நாடக அரசைப் பின்பற்றி  தமிழக அரசும் , அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து இத்தகைய முடிவை அமைதியாக எடுத்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.